Monday, July 6, 2020

நட்பு

கவிதையை நேசிக்க நான் ஒன்றும் கவிஞன் அல்ல,
இரு விழிகளின் மேல் கொண்ட நட்பினால் கவிதையை நேசித்தேன்,
அந்த விழிகளுக்காக எழுதிக் கொண்டு இருப்பேன் என் உயிர் மூச்சு இருக்கும் வரை,
  நட்பு

காதல் பிரிவு

கவிதையை மட்டும் நேசித்த நான் காதலை நேசிக்கவில்லை என பிரிந்து சென்று விட்டாள்,
பிரிந்தவலுக்கு தெரியவில்லை நான் நேசித்த முதல் கவிதையே அவள் தான் என்று,

காதல்


மல்லிகைத் தோட்டத்தில் மலரின் வெள்ளை அழகு
மௌனத் தோட்டத்தில் உன்புன்னகை கொள்ளை அழகு
விழித்தோட்டத்தில் நீ சொல்லும் காதல் அழகு
மனத்தோட்டத்தில் நீ வந்து போவது அழகு

வசந்த கால மேகங்கள்


வானில் தவழும் மேகங்கள்
விதவிதமான 
வடிவங்கள்
மனதைக்
கவரும்
உருவங்கள். 
கடவுள் வரைந்த
ஓவியங்கள்.
கற்பனை தூண்டிடும்
காவியங்கள்.
மலரோடு
பேசிடும் முகில்கள்
முகில்களைப்
பார்த்து மகிழ்ந்திடும்
மயில்கள்.
மயில்களைப் பார்த்து
மகிழ்ந்திடும் மனிதர்கள்

சதுரங்க வேட்டை


கவிவிழியாள் காந்திமதி
---------------'-----------------------------

*சதுரங்க வேட்டை*
 
ஆடுபவர்: *கவிவிழியாள் காந்திமதி*

எதிரிகளைச்
சந்தித்து சிந்தித்து
 விளையாடும்
 விளையாட்டு..
பலமான
 யானையையும் பதறாமல் 
வேட்டையாடி
வீழ்த்த முடியும்..
சிப்பாய்களின் அரணும் சுழன்றுசுழன்று
அடிக்கும் 
குதிரையின் வீரமும்
 விளையாட்டில் ஆரம்பம்..
ராஜாவின் பாதுகாப்பும்
 ராணியின் ஆக்கிரமிப்பும் விளையாட்டில் உச்சகட்டம்...
மதியை விதியால் வெல்லும்
வெற்றி தோல்வி
 நம் கைகளிலே
துணிந்து  *விளையாடு* 
*வேட்டையாடு*
*வெற்றியோடு*

கவிஞர் கவிவிழியாள் காந்திமதி

《《☆ *B l a c k r o s e F a i s a l * ☆》》

நினைவுகளில்
மலர்கிறாய்
இதழ்களில்
புன்னகையால்
விரிகிறாய்
நேசத்தில்
நெஞ்சமெல்லாம்
சுவாசமாகிறாய்

நேசித்தாய்
உன்னால் என் 
உணர்வுகளும்
எனக்காகவே
ப்ரியப்பட்டது

காதல் செய்தாய்
உன் காதலுக்காகவே
என் உயிர்கூட
கொஞ்சம் அழகாக
ஒப்பனை செய்துகொண்டது

கவிதை சொன்னாய்
உன் ரசனை கேட்ட
என் வெட்கம் கூட
நிறையவே சிவந்து போனது

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
என் ஜென்மம் கூட
மீண்டும் பிறந்து
உன் காதலில்
குழந்தையாய் தவழ்ந்த போது
என்னையே நான்
படித்தேன்
எனக்குள் நீயும் கூட
ஒரு காவிய புத்தகமானாய்

இன்று உன் அனைத்துமே
எனக்குள் நினைவுகளால்
மட்டுமே நிரம்பி வழிகின்றது
நிஜத்தில் நிழல்போல்
தொடர்வேன் என்ற உன் அந்த
உயிர் வார்த்தைகள்
நான் சுவாசிக்கும்
காற்றில் கூட காண்வில்லையே

மிகவும் தொலைவில்
தொலைத்தது உன்னை
நானா...!
இல்லை நீயே என்னை தொலைத்து
சென்றாயா...?

தேடி பார்க்கின்றேன்
உன்னையும் என்னையும்
காற்றின் இடைவெளிகளிலும்
கடல் அலையின் நிறங்களிலும்....

              முற்றும்
❪❂❫━━━━━━━━‼️
《《☆ *B l a c k  r o s e  F a i s a l * ☆》》