Monday, March 28, 2022

வாழ்க்கை துணை

அன்று உனது மௌனம் அறியாத நான்,
இன்று காதலின் மௌனம் அறியாமல் தவிக்கிறேன்,
உனது சம்மதம் கிடைத்தும் உறவுகளின் எண்ணம் அறிய வேண்டுகிறேன்,
காதலின் வலியை உணர்ந்தும் உந்தன் கரம் பிடிக்க ஏ‌‌ங்குகிறேன்,
மனதில் நேசித்த உன்னை மனைவியாக மாலையிட்டேன்,
இனி வரும் காலம் நமக்கானதாக மாற சபதமிட்டேன்.

முத்தமிட்டால்

​விழிகளால் வரையப்பட்ட சித்திரம் அதற்கு நீயே என்றும் நிரந்தரம் கவர்ந்து செல்ல வாக்களித்தேன் விழியோரம்

புன்னகைத்து முத்தமிட்டால் இதழோரம்


வாழ்க்கை துணை

கனவுகளை தொலைத்துவிட்டேன் கண்மணி வருகைக்காக கவிதைகளாய் புலம்புகின்றேன் என்னவள் ரசிப்பதற்காக காலமெல்லாம் கதை பேசும் எந்தன் இதழ்கள் உன்னை வர்ணிக்க கலங்கி நின்றேன் தனியாக

என் வாழ்க்கையில் நீ என்றும் துணையாக.


இளமை காதல்

​காத்திருந்த காலங்கள் தொட்டணைத்த தருணங்கள் காதல் செய்த கோலங்கள்

தெரிந்து செய்த மாயைகள் வாழ்க்கை சொன்ன பாடங்கள் தனித்து நின்ற நாட்கள் இனியாவது அவற்றை உணருங்கள்.


உயிர்

​எண்ணங்கள் பல நினைத்து எதிர்பாராத தருணத்தில்

கடமைகள் பல இருந்தும்

கடவுளின் ஆணைக்காக

உறவுகளை பிரிந்து தவிக்கும் உயிர்.

Friday, March 25, 2022

Thuyaram...

waves - girls

kadal azhai ondru,

karai kadanthathu indru,

Thendral theendum endru,

Manam kalangiyathu indru....