Monday, July 6, 2020

நிலவுமகள்

ஐஸ் கிரீம்
நீ அல்ல
நான்தான்

உன்னைக் கண்டதும்
உருகுவதால் 

சிலை
நீ அல்ல
நான்தான்

உன் எழில் கண்டு
சிலையாவதால்

மலர் 
நீ அல்ல
நான்தான்

நீ இன்றி
வாடுவதால்

மான் 
நீ அல்ல
நான்தான்

உன் கடைக்கண்
பார்வை பட்டதும்
துள்ளி ஓடுவதால்

தேன் 
நீ அல்ல
நான்தான்

என் கனவுகளுக்கு
நீ
 தீ வைப்பதால்

நிலா
நீ அல்ல
நான்தான்

காதல் எனும் களங்கம் 
என் மனதில்
உள்ளதால்

மேகம்
 நீ அல்ல
நான்தான்

உனக்காக
கண்ணீர் மழை
பொழிவதால்

கவிஞர் புதுவை குமார்

No comments:

Post a Comment