Tuesday, August 4, 2020

நினைவுகள்


கண்ணில் கருக்கொள்ளும்
கனவுகள் என்
இதயத்தைக் குத்திக்
கிழித்திட்ட போதும்
மறக்க முடியாத நினைவுகளை
விட்டுப்போக முடியாதவாறு
மீண்டும் மீண்டும் என்னை
காயப்படுத்துகின்றன.

நட்பு


ஆயிரம் நட்புகள் 
சுற்றியிருந்தாலும் 
மனம் தேடுவது 
நெருக்கமான 
ஒரு நட்பையே
இங்கு பலரின் 
கவலைகளும் 
புலம்பல்களும் 
வலிகளும் 
அந்த ஒரு 
நட்பிற்கானதே 
என்றால் மிகையே..

அன்பு


இதழ்கள் 
அசைக்காமல் 
உரையாடிக் 
கொண்டிருக்கிறது மனம்…

ஒரு சிரிப்பில் 
எண்ணற்ற 
துக்கங்களை 
மறைத்தது இதயம்…

இதயத்தில் 
மறைத்து வைத்துள்ள
சோகத்தை மறைக்க…

இதழ்கள் 
நடத்தும் நாடகமே சிரிப்பு!
                                    அன்பு~

நிலா


தனிமையை தேடி இரவினில் தவிக்கும் நிலா,
தான் இழந்த வாழ்க்கையை நினைத்து உருகுகின்றது..

Manam


உன்னை விட்டு ஒன்று தவரிப் போனது என்று அதிகம் கவலை கொள்ளாதே...
அதே போல் நீ நினைத்த ஒன்று உனக்கு கிடைத்தது விட்டது என அதிக இன்பமும் கொள்ளாதே!!!
நீ நினைப்பது ஒன்றும் இங்கே நடந்ததில்லை...
ஏற்கனவே இறைவனால் முடிவு செய்யப்பட்டது....
இப்பொழு நடந்து விட்டது....

Uravugal


நீ சிரிக்கும் போது 
உன்னுடன் ஆயிரம் 
உறவுகள் இருக்கும் 
ஆனால் நீ அழும் போது உன்னை நேசித்த உறவுகள் மட்டுமே இருக்கும்.